என் முதல் காதல்


என்னை முற்றும் மறக்கவைத்த
காதல்.......
கண்டேன் உன்னை- நீ
என் கண்களுக்குள் புகுந்து- என்
இதயத்தில் அமர்ந்து கொண்டாய்.....
கண்களை நான் - மூடவும்
பயந்தேன் - நான்
கண்மூடும் நேரத்தில் நீ
என்
பார்வையிலிருந்து விலகிபோவாய்
என்று...
அந்த நாட்களில் - உனக்கு
கவிதை வடிக்க - நான்
பேனா எடுத்தேன் என் முதல் -
காதலுக்கு
என் முதல் கன்னி கவிதை.....
அப்போது தட்டு தடுமாறி - சில
எழுதுக்கள் விட்டு விடுபட்டு - என்
முதல் குறைபிரசவ
கவிக்குழந்தையை - உனக்காய்
நான் பிரசவித்தேன்.......
அதுதான் என் முதல் கவிதை
"நீ வேண்டும் எனக்கு"

Comments

Popular Posts