நண்பர்கள்
விழுந்தால் எழச் சொல்லி
நீள்கிற கைகள்
களைத்தால் இளைப்பாற
இடந்தரும் தோள்கள்
என் காதல் கரைசேர
கொடுக்கப்படும் தலைகள்
அழகெல்லாம் என்னோடு
சேர்ந்து காணும் விழி கள்
அழவைக்கும் சோகத்தை
நின்று கேட்கும் செவிகள்
செத்து சேரும் காடு வரை
கூட வரும் கால்கள்
இவர்கள்
Comments
Post a Comment